பிரான்ஸ் செல்ல முயற்சித்த 90 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை..!
இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 90 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
நீர்கொழும்புக்கு மேற்கு திசையில் கடலில் சென்றுக்கொண்டிருந்த படகை கடற்படையினர் நேற்று காலை சுற்றிவளைத்துள்ளனர்.
அதில் பயணித்த 90 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் இலங்கையின் பால்வேறு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.