கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை!  மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!

நேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 
 
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்மப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்ட்ய், மயக்கமடைந்த நிலையில் மருத்துானைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மூலக்கதை