பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது!  காணொளி வெளியிட்ட சிறுவன்!!

நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Montauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். 

மூலக்கதை