‘ஜிம் – 2’ மாநாட்டில் வேலைவாய்ப்பு தொழில்களுக்கு முக்கியத்துவம்
இரண்டாவது
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள
தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதலீடு செய்ய
அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது என, தொழில் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
சென்னையில், 2019, ஜனவரி 23, 24ம் தேதிகளில்,
‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு
நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்து
வருகின்றன.இதற்காக,
பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன், தமிழக தொழில் வளர்ச்சி
மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேச்சு நடைபெறுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள்
கூறியதாவது:
அடுத்த
ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில், வேலைவாய்ப்பு
அதிகம் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்
அளிக்கிறோம்.ஏற்கனவே, தமிழகத்தில் தொழில் துவங்கி,
விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்கள், புதிதாக தொழில் துவங்க
விரும்பும், ஆட்டோ மொபைல், உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ்,
டெக்ஸ்டைல் போன்ற நிறுவனங்களுக்கு, முக்கியத்துவம் வழங்க
உள்ளோம்.
இந்த இலக்கை நோக்கிய பயணம் தான் தற்போது நடந்து வருகிறது. இது போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. முதல் சர்வதேச மாநாட்டில் முதலீடு செய்த
நிறுவனங்களிடமிருந்து, இதுவரை, 1.20 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.