நவாஸ் மனைவி மறைவு: சுஷ்மா இரங்கல்
புதுடில்லி: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் மனைவி குல்சூம் நவாஸ் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்
ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் நவாஸ் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பதவிவிட்டுள்ள இரங்கல் செய்தி, நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.