ஸ்மார்ட் போன்-, கார் இறக்குமதிக்கு பாக்., தடை

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒருவருடத்திற்கு 'ஸ்மார்ட் போன்'களை இறக்குமதி செய்ய கூடாது, என புதிய பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார். அதன்பின் தேவையில்லாத சொகுசு ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்ப்பேன் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இது போல அரசு சம்பந்தமான பல ஆடம்பர விழாக்களை தடை செய்தார்.இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்வதை தடைசெய்ய பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். இதன்படி இனி பாகிஸ்தானில் உற்பத்தி ஆகும் செல்போன்களை மட்டுமே வாங்க முடியும். ஒரு ஆண்டு இந்த தடை நீடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சொகுசு கார், பாலாடைக்கட்டி, வெண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் தடை செய்யப்படலாம்.பாகிஸ்தானில் தற்போது பொருளாதார தட்டுப்பாடு நிலவுகிறது. அவர்களிடம் டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இன்னும் அதிக டாலர்களை இழக்க நேரிடும். இது இன்னும் அந்த நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும். இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.முதலில் சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானை கடனாளியாக்க விரும்ப மாட்டேன், என்று இம்ரான் கான் கூறியுள்ளார். இதையடுத்தே தற்போது அங்கு ஸ்மார்ட்போன் இறக்குமதியை தடை செய்துள்ளார்.

மூலக்கதை