‘டெப்ட் மியூச்சுவல் பண்டு’களில் ரூ.6,800 கோடி வெளியேறியது
புதுடில்லி:கடந்த ஆகஸ்டில், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும், ‘டெப்ட் மியூச்சுவல் பண்டு’ திட்டங்களில் இருந்து, 6,803 கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில், இத்திட்டங்கள், 9,810 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன. இந்திட்டங்களில், ஏப்., – ஆகஸ்ட் வரை, 52,700 கோடி ரூபாய் முதலீடு, வெளியேறியுள்ளது.கடந்த ஆகஸ்டில், ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், இருந்து, 1.75 லட்சம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதில், குறுகிய காலத்திற்கு, ரொக்கச் சொத்துகள், கருவூல பில்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும், ‘லிக்யுட் மியூச்சுவல் பண்டு’ திட்டங்களில் இருந்து மட்டும், 1.71 லட்சம் கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்று உள்ளனர்.‘‘ரூபாய் மதிப்பின் சரிவு, கடன் பத்திர வட்டி வருவாய் உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவை காரணமாக, டெப்ட் பண்டுகளில் அதிக முதலீடு வெளியேறுகிறது,’’ என, ‘பஜாஜ் கேப்பிடல்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராகுல் பரேக் தெரிவித்துள்ளார்.