பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி முடக்கம்
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ‘பந்த்’துக்கு ஆதரவு தெரிவித்ததால், 85 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி பணிகள் பாதித்தன.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த, ‘பந்த்’தில், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினரும், ஆதரவு அளித்தனர். இதனால், 90 சதவீத உள்நாட்டு ஆடை உற்பத்தி, ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்கள் இயங்கவில்லை.பெரும்பாலான தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. போராட்டத்தால், 85 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் பணிகள் முடங்கின. சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை; 2 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை சரக்கு புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டது.