குரலின் தரம் கூடும் ‘ஏர்டெல்’ அறிவிப்பு
சென்னை:தமிழகத்தில், ‘4ஜி’ மொபைல் போன் பயன்பாட்டாளர்களின், குரல் தரத்தை மேம்படுத்த, தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தியுள்ளதாக, ‘ஏர்டெல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்தியாவில், முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறது. தமிழகத்தில், 2.3 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
சமீபகாலமாக, மொபைல் போனில் பேசும் போது, சிக்னல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக, வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, 4ஜி வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில், இந்நிறுவனம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது. மொபைலில் பேசும் போது, குரல் தரம் சிறப்பாக இருக்கும் வகையில், நவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி குரலின் தரம் மற்றும் ‘இன்டர்நெட்’ வேகம் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.