பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது  மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது எனமத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் !வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன..

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் 'வாட்' வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் 'வாட்' வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலக்கதை