கல்பாக்கம் அருகே பரிதாபம் பஸ் மோதி பள்ளி மாணவன் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல்பாக்கம் அருகே பரிதாபம் பஸ் மோதி பள்ளி மாணவன் பலி

கல்பாக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (5).

இவன் கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில்1ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு ஆட்டோவில் சென்றான்.

காத்தான்கடை என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ், அவர்களது ஆட்டோ மீது உரசியபடி சென்றது. இதில் ஆட்டோவில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த  மாணவன் வெற்றியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.



உடனடியாக அவனை கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் வெற்றியை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை