மாணவர்களுக்கு இலவச குடை: கொல்கத்தா மாநகராட்சி அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாணவர்களுக்கு இலவச குடை: கொல்கத்தா மாநகராட்சி அசத்தல்

கொல்கத்தா: கொல்கத்தா மாநகராட்சி நிர்வாகம், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவமாக குடை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது.   மேற்குவங்க மாநில அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடை மற்றும் மழைக்கால கவச ஆடை (ரெயின் கோட்) வழங்க கொல்கத்தா மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வித்துறையின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு குடை வழங்கப்படும்.



இது, மாணவ, மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். சில மாணவ, மாணவியருக்கு சொந்தமாக குடை இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் அவர்கள் பள்ளிக்கு சரியாக வரமுடியாத நிலை ஏற்படுகிறது.

இவர்களுக்கு வழங்கப்படும் குடைகள், மழைக்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

.

மூலக்கதை