துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!

இரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 
 
பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன.  இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை