இலங்கை அகதி பெண்ணின் பிரசவம்! வைத்தியர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அகதி பெண்ணின் பிரசவம்! வைத்தியர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்

இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
 
ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலானி என்பவரே இவ்வாறு குழந்தைகளை பெற்றுள்ளார்.
 
அவர் கர்ப்பமுற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காலானஜக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் வைத்தியர்கள் கூறினர்.
 
ன்னர் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலானிக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.
 
அவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலானி பெற்றெடுத்தார்.
 
2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். 
 
ஈரோடு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

மூலக்கதை