கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை

தினமலர்  தினமலர்
கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை

புதுடில்லி: தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில் வீராங்கனை ஓருவர் சீறினார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்த பிரிவில் டில்லியை சேர்ந்த திவ்யா கக்ரன் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். நேற்று டில்லியில் திவ்யா கக்ரன் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகளுக்கு அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஆதரவு அளிக்கவில்லை

இந்த விழாவில் திவ்யா கக்ரன், கெஜ்ரிவால் முன்னிலையில்பேசியது, ”கடந்த கோல்டு டெஸ்டில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது நீங்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தீர்கள், அதை ஏன் நிறைவேற்றவில்லை. எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கக்கூட இல்லை. இப்போது நீங்களே எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்”. எங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி செய்திருந்தால், தங்கப்பதக்கம் வென்றிருக்க முடியும்" என்று கூறினார்.
இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பேசியது, இந்த அரசு செய்ய முயலும் அனைத்து பணிகளுக்கும் தடைகள் உண்டாக்கப்படுகிறது என்பதை பத்திரிகை மூலம் தெரிந்துக்கொள்ளவேண்டும். உங்களைப் போல் பல விளையாட்டு வீரர்கள் குறை சொல்லுகின்றனர்” . நாங்கள் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் நல திட்டங்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே எங்களால் பாராட்டு விழாவையாவது நடத்த முடிகிறது" என்றார்.

மூலக்கதை