ஓய்வை அறிவித்த குக்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஓய்வை அறிவித்த குக்...!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட்போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவி;த்துள்ளார்.
 
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 33 வயதான குக் சிறப்பாக விளையாடாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
 
தீவிரமாக சிந்தித்த பின்னர் நான் இந்தியாவுடனான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன் என குக் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
 
இது துயரமான நாளாகயிருந்தாலும் நான் பெரும் முகத்துடன் அதனை அறிவிக்கலாம் ஏனெனில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கிவிட்டேன் இனி எஞ்சியது எதுவுமில்லை என குக் தெரிவித்துள்ளார்.
 
நான் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவிற்கு சாதித்துவிட்டேன் இவ்வளவு நீண்ட காலம் என்னால் இங்கிலாந்து சில தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாட முடிந்தமை குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனது சகவீரர்களுடன் செலவிடும் நேரத்தை இழக்கப்போகின்றேன் என்பதே மிகவும் கடினமாக விடயமாக உள்ளது எனினும் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என கருதுகின்றேன் எனவும் குக் குறிப்பிட்டுள்ளார்.
 
நான் எனது வாழ்நாள்முழுவதும், சிறுவயதில் எனது வீட்டில் விளையாட தொடங்கிய காலம் முதல் கிரிக்கெட்டை நேசித்துள்ளேன்,இங்கிலாந்து அணியின் சேர்ட்டை அணிந்து ஆட கிடைத்தது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதையும் நான் குறைத்து மதிப்பிடமாட்டேன் என குக் தெரிவித்துள்ளார்.
 
அலைஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 32 சதங்களுடன் 12,254 சதங்களை பெற்றுள்ளார்.
 
2006 ம் ஆண்டு 21 வயதில் இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குக் தனது முதல் டெஸ்டிலேயே சதமடித்திருந்தார்.
 
அவரது தலைமையிலேயே இங்கிலாந்து அணி 20 வருடங்களிற்கு பின்னர் முதல் தடவையாக ஆசஸ் தொடரை கைப்பற்றியிருந்ததுடன் இந்தியாவிற்கு எதிரான தொடரையும் 2012 இல் கைப்பற்றியிருந்தது.
 

மூலக்கதை