ஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி

தினகரன்  தினகரன்
ஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி

இந்தோனேசியா: ஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் விபச்சார புகாரில் சிக்கியதால் ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் தலைபாங் ஆகிய பகுதிகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற ஜப்பான் கூடைப்பந்தாட்ட அணி தொடக்க ஆட்டத்தில் கத்தாரு அணியை வெற்றி கொண்டது. வெற்றி கொண்டாட்டத்திற்கு இடையே அணியை சேர்ந்த 4 பேர் அணி ஜெர்சியுடன் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. புகாரையடுத்து 4 வீரர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

மூலக்கதை