திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிய வழக்கு 4 வாரத்துக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரைக் கிளை

தினகரன்  தினகரன்
திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிய வழக்கு 4 வாரத்துக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரைக் கிளை

திருச்சி: திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கும், திருச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வட்டம் உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது. காவிரி ஆற்றப்படுகையில் மணல் திருட்டால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை