விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

தினகரன்  தினகரன்
விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லியிடம் விளக்கம் கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இதற்கு முன் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த போது, போதிய பயிற்சி ஆட்டம் இல்லை, அடுத்தடுத்து போட்டிகள் நடந்ததாக கூறினர். இப்போது அதுபோன்ற எந்த புகாரும் இல்லை. எனவே தோல்விக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படும்.  ரவிசாஸ்திரி மற்றும் தற்போதைய துணை பயிற்சியாளர்களின் கீழ், நமது அணி ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. இங்கிலாந்திலும் தடுமாறுகிறது. இதற்கு முன் இதுபோன்ற தோல்விகளின் போது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றனர். எனவே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழக்கும் பட்சத்தில், அணி நிர்வாகத்தில் ரவிசாஸ்திரி, கோஹ்லியின் ஆதிக்கம் வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது.

மூலக்கதை