கேரள வெள்ள நிவாரணத்திற்கு ராம்சரண் உதவி
கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையால், நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளனர்.. இந்தநிலையில் கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ் திரையுலகில் இருந்து சூர்யா, கார்த்தி, கமல் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற பண உதவியை செய்துள்ளனர்.
இதேபோல தெலுங்கு திரையுலகில் இருந்தும் சினிமா நட்சத்திரங்கள் தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். இதில் நடிகர் ராம்சரண் 60 லட்ச ரூபாயும், 10 டன் அரிசியையும் அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தன் பங்கிற்கு 5 லட்சம் ரூபாய் தொகையை அனுப்பி வைத்து, அதன் ரசீதை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.