மம்முட்டி - துல்கர் இணைந்து வழங்கிய ரூ.25 லட்சம் நிதி

தினமலர்  தினமலர்
மம்முட்டி  துல்கர் இணைந்து வழங்கிய ரூ.25 லட்சம் நிதி

கேரளாவில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரும் தங்களது உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் மம்முட்டி நேற்று முன்தினம் எர்ணாகுளம் வடக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அந்த பகுதி எம்.எல்.ஏவுடன் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, உதவி செய்வதற்கு தாங்கள் இருக்கிறோம் கவலைப்பட வேண்டாம் என தைரியமும் கூறினார்.

இந்தநிலையில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக தனது பங்காக 15 லட்சம் ரூபாயும் தனது மகனும் நடிகருமான துல்கர் சல்மானின் பங்காக 10 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளார். மொத்தம் இந்த 25 லட்ச ரூபாயை இன்று எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார் மம்முட்டி.

மூலக்கதை