பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர் அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர் அடைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் கடல் மற்றும் நிலப்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.

இதேபோல் இந்திய சிறைகளில் 108 மீனவர்கள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 357 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் 31 மீனவர்கள் உள்பட 114 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்தது.

அதேபோல் 941 மீனவர்கள் உள்பட 951 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது.

சிறை கைதிகளுக்கான பாகிஸ்தான் - இந்தியா நீதித்துறை குழு 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில், இடைப்பட்ட காலங்களில் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை