நவாஸ் ஷெரீப்புக்கு உடல்நலக் குறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நவாஸ் ஷெரீப்புக்கு உடல்நலக் குறைவு

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்த நவாஸ் ெஷரீப்புக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

சிறுநீரக பாதிப்புக்காக அடிடாலா சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரகம் பாதிப்பு தீவிரமானதால், அவரை வேறு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதனால், அடிடாலா சிறைச்சாலையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அழைத்து செல்லப்பட்ட நவாஸ் ெஷரீப், பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை