எதிர்கட்சிகளின் மாறுபட்ட கருத்தால் முத்தலாக் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை

தினகரன்  தினகரன்
எதிர்கட்சிகளின் மாறுபட்ட கருத்தால் முத்தலாக் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை

புதுடெல்லி: முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து திருத்தப்பட்ட மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் மாறுபட்ட கருத்துகளால் மாநிலங்களவையில் இன்று முத்தலாக் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. மழைகால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதால் இனி குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கலாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மசோதாவில் முஸ்லிம் ஆண்களை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவில் கைது செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் ஜாமின் கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றவுடன் முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆன் ஒருவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், இதில் உரிய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டது. முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் படி பாதிக்கப்படும் நபர் நீதிமன்றத்தை அணுகி முறையிட முடியும். மைனர் குழந்தைகள் பெண்ணின் பாதுகாப்பில் இருக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை