இலங்கை தேசிய அடையாள அட்டை பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது
அதற்கமைய தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள 100 ரூபா அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா அறவிடப்பட உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்பட்டுள்ளது.