முத்தலாக் : இன்று ராஜ்யசபாவில் விவாதம்

தினமலர்  தினமலர்
முத்தலாக் : இன்று ராஜ்யசபாவில் விவாதம்

புதுடில்லி: திருமணம் ஆன முஸ்லிம் பெண்களிடம், மூன்று முறை தலாக் கூறி, உடனடியாக அவர்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை, சட்ட விரோதமாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்த சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறை வேற்றப் பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என, கருத்து தெரிவித்துள்ளதால், இந்த மசோதா, ராஜ்யசபாவில் இன்னும் றைவேற்றப்படவில்லை.
ஜாமின்
இந்நிலையில், முத்தலாக் கூறியதற்காக கைது செய்யப்படும் நபருக்கு, நீதிபதி நினைத்தால், ஜாமின் வழங்கலாம் என்ற வகையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது; இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.இந்த திருத்தப்பட்ட மசோதா இன்று ராஜ்யசபாவில் விவாதத்திற்கு வருகிறது. இதனால் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை