ஜப்பானில் ஜி20 உச்சி மாநாடு, மோடி எம்புட்டு அழகு!: ஆஸி. பிரதமர் வெளியிட்ட செல்பி படம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜப்பானில் ஜி20 உச்சி மாநாடு, மோடி எம்புட்டு அழகு!: ஆஸி. பிரதமர் வெளியிட்ட செல்பி படம்

ஒசாகா: உலகத் தலைவர்கள் ஜி 20 உச்சிமாநாட்டில் நட்புறவை கூறும் வகையில்,  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பரபரப்பான நிலையில் இருந்து சிறிது நேரத்தை ஒதுக்கி ஒரு செல்பி புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்த சந்திப்பைக் குறிக்கும் வகையில் செல்பி ஒன்றை எடுத்துள்ளார்.

இரண்டு பிரதமர்களின் புகைப்படத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மாநிலத் தலைவரின் ஒரு இனிமையான தலைப்புடன் அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் - ‘கித்தானா ஆச்சா ஹே மோடி!’ (மோடி எவ்வளவு நன்றாக இருக்கிறார்!) என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒசாகா நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார்.

ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

முதல் நாள் அமர்வுகளில் பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மனிதகுலத்திற்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சவூதிபட்டத்து இளவரசர் , தென்கொரியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.

.

மூலக்கதை