குஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சை தொடர்பான மனு : உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

தினகரன்  தினகரன்
குஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சை தொடர்பான மனு : உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: குஜராத்தின் 2 ராஜ்யசபா காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக குஜராத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.குஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சைகுஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ தலைவர் அமித் ஷாவும், அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மக்களவைத் தேர்தலில் காந்தி நகர் (குஜராத்), அமேதி (உபி) தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களில் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும், ஸ்மிருதி இரானி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனால், இம்மாநிலத்தில் 2 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும், இந்த 2 இடங்களுக்கும் தனித்தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு,  தனித்தனியாகவே தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தது.காங்கிரஸ் கட்சி சார்பில் மனு தாக்கல்இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்ரேலி தொகுதி எம்எல்ஏ.வும், குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பரேஷ்பாய் தனானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘ஒரே மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகும். அது மட்டுமின்றி, விகிதாச்சார பிரதிநிதித்துவ திட்டத்திலும் குழப்பத்தை விளைவிக்கும். எனவே, இந்த 2 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரரின் வழக்கறிஞர் விவேக் தாங்கா கேட்டுக் கொண்டார். இதை விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உச்சநீதிமன்றம், காங்கிரஸ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு(இன்றைய தேதிக்கு) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலங்களவையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்தது. மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின், ஆணையத்தின் அதிகார வரம்பில் தலையிட உச்சநீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை என்றும் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடைபெற்று முடியும் வரை எந்த தடையும் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கறாராக பதில் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகவும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மூலக்கதை