தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத தண்ணீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜுன் மாதத்திற்கு உரிய 9.19 டி.எம்.சி., ஜீலைக்கான 31.24 டி.எம்.சி. காவிரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.