10 நிமிடம் வரும் கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் : சுசீந்திரன்

தினமலர்  தினமலர்
10 நிமிடம் வரும் கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் : சுசீந்திரன்

10 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள சுசீந்திரன், சுட்டுபிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராகி இருக்கிறார். என் மனசுக்கு பிடித்திருந்தால் 10 நிமிடம் வரக்கூடிய கேரக்டரிலும் நடிப்பேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:

சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின், எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு, என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

எதுவொன்றைச் செய்தாலும் அதில் உச்சத்திற்கு சென்ற பின்பு தான் அடுத்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்படி பார்த்தால் இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொடவில்லை. அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். இதற்கிடையில், இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது 10 நிமிட பாத்திரமாக இருந்தாலும் கூட.

இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.

மூலக்கதை