டாப்சியின் உருக்கம்

தினமலர்  தினமலர்
டாப்சியின் உருக்கம்

ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், டாப்சி. சமீபகாலமாக, தமிழில் பெரிய அளவிலான படங்கள் இல்லை. அதனால், பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், அடிக்கடி கோலிவுட்டுக்கு வந்து, சில மெகா, 'ஹீரோ' மற்றும் இயக்குனர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, படவேட்டை நடத்துகிறார். அதோடு, 'எந்த மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மொழி படங்களில் நடித்தது போன்ற மனநிறைவு எனக்கு கிடைக்கவில்லை. ரசிகர்களின் நெஞ்சை உருக வைக்கும் வகையிலான கதைகளில் என்னை நடிக்க வையுங்கள்...' என்று, கேட்டு வருகிறார். அடுத்தடுத்து சொன்னாலும் ஆகும் காலம்தான் ஆகும்!

— எலீசா

மூலக்கதை