மாமியார் பெயரில் படம் எடுக்கிறாரா ஜெயம்ரவி?

தினமலர்  தினமலர்
மாமியார் பெயரில் படம் எடுக்கிறாரா ஜெயம்ரவி?

'ரோமியோ ஜூலியட்', 'போகன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் லக்ஷமணும், 'ஜெயம்' ரவியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கியது. ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 'ஜெயம்' ரவி கதாநாயகனாக அறிமுகமாகி 16-ஆண்டுகளாகிவிட்டன.

தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த படம் 'ஜெயம்' ரவி நடிக்கும் 25-வது படம். எனவே அந்தப்படத்துக்கு தற்காலிகமாக 'ஜெயம்' ரவி-25' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'ஜெயம்' ரவியுடன் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் சரண்யா ரோனித் ராய், தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். 'ஜெயம்' ரவியின் மாமியாரான இவர் தான் ஜெயம்ரவி நடிப்பில் 'அடங்கமறு' படத்தை தயாரித்தவர். தற்போது எடுக்கப்பட உள்ள படம் இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்றாலும் தயாரிப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஜெயம் ரவியே தீர்மானிக்கிறார்.

அடங்கமறு படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கிய கிளாப் போர்ட் சத்தியமூர்த்தி என்ற விநியோகஸ்தர் பல கோடி பணபாக்கி வைத்ததால், அவர் வெளியிடும் சிந்துபாத் படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை செட்டில் பண்ண வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் புகார் கொடுத்தது கூட ஜெயம் ரவிதான். இதை வைத்து தன்னுடைய மாமியார் பெயரில் ஜெயம்ரவி சொந்தப்படம் எடுப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது.

மூலக்கதை