கடன், பணப்பயன் வழங்காவிடில் போராட்டம்: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடன், பணப்பயன் வழங்காவிடில் போராட்டம்: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் முடிவு

திருவொற்றியூர்: எண்ணூர் அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளுடன்  420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து இங்கு செயல்பட்டு வந்த அலகுகள் பழுதடைந்தது.

பல கோடி ரூபாய் செலவு செய்தும் இந்த அலகுகளை தடையில்லாமல் இயக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 5 அலகுகளும் நிரந்தரமாக மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய 470 ஊழியர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, வடசென்னை அனல்மின் நிலையம்  அலகு 1, 2 ஆகிய பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கான சம்பளம், பணப்பயன்கள் எண்ணூர் அனல் மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி சுமார் ரூ. 1 கோடி, ஈட்டு விடுப்பு தொகை சுமார் ரூ. 65 லட்சம், மின் உற்பத்தி போனஸ் ரூ. 45 லட்சம் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கு போதிய பணம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

ஆனால் தொழிலாளர்களுக்கு கடன் வழங்காமலேயே அதற்கான தவணை தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஊழியர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம்  நடத்தினர்.

எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தங்களுக்கு கடன் மற்றும் பணப்பயன்களை வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு  தமிழ்நாடு மின் ஊழியர்  சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழங்காவிட்டால் குடும்பத்தோடு போராட்டம் நடத்துவோம் என்று மின்வாரியம் ஊழியர்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை