குடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி பிரதமரிடம் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி பிரதமரிடம் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் மனு

பள்ளிப்பட்டு: பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மனு அளித்தார். அதில், போதிய மழையில்லாத காரணத்தாலும் தமிழக அரசு உரிய  நடவடிக்கை எடுக்காததாலும் குடிநீருக்காக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனது தொகுதியில் கடந்த ஒருமாதத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

ஒரு குடம் தண்ணீர் எடுக்க 5 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண மத்திய அரசு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும்,

.

மூலக்கதை