பவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
பவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதியதில், பாகிஸ்தான் அணி, ஹரிஸ் சோஹைலின் அதிரடியால் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்து, தென்னாப்பிரிக்க அணி வெளியேறுகிறது. அப்போது, தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில், ‘‘நாங்கள் சரியான கிரிக்கெட்டை ஆடவில்லை.

இந்த தொடர் முழுவதும் நாங்கள் எதிரணியின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அவர்களுக்கு அளித்துவிட்டோம்.

அவர்களின் ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தோல்விக்கு அவர்களின் சுழற்பந்துவீச்சு மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது.



ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து, பிறகு பார்ட்னர்ஷிப்பை தொடங்கினோம். அடுத்தும் விக்கெட்டை இழந்தோம்.

விளையாட்டில் இது சகஜம்தான் என்றாலும் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. கடுமையாகப் பயிற்சி செய்தோம்.

ஆனாலும் விளையாட்டில் நம்பிக்கை முக்கியம். எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது.

வேகப்பந்து வீச்சில் ரபாடா போன்ற வீரர்கள் தான் முக்கியமானவர்கள். ஆனால், ரபாடா போன்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை ஐ. பி. எல் தொடரின் மூலம் பேட்ஸ்மேன்கள் கணித்து வைத்து கொண்டனர்.

நிச்சயமாக இதுவே எங்களுக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

.

மூலக்கதை