குற்றாலத்தில் குளுகுளு சீசன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்றாலத்தில் குளுகுளு சீசன்

தென்காசி: குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சீசன் களைகட்டியுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

குற்றாலத்தில் இந்தாண்டு துவக்கத்தில் மூன்று வாரங்கள் சீசன் சரிவர காணப்படாத நிலையில் கடந்த 5 தினங்களாக நன்றாக உள்ளது. இதமான சூழல், மிதமான சாரல், இதமான தென்றல் காற்று, அருவிகளில் கொட்டும் தண்ணீர் என சீசன் அருமையாக உள்ளது.

இன்று காலை குற்றாலம் பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. இதமான காற்று வீசுகிறது.

இதன் காரணமாக மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது.

ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

.

மூலக்கதை