காரில் லிப்ட் கொடுத்து ஏற்றிய இளம்பெண்களிடம் சில்மிஷம் ஆயுதப்படை எஸ்ஐ கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
காரில் லிப்ட் கொடுத்து ஏற்றிய இளம்பெண்களிடம் சில்மிஷம் ஆயுதப்படை எஸ்ஐ கைது

திருவனந்தபுரம்: காரில் லிப்ட் கேட்டு ஏறிய எஸ்ஐ, அந்த காரில் இருந்த இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுகுணன்(44).

இவர் ஆயுதப்படையில் எஸ்ஐயாக உள்ளார். நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வர்க்கலா பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். இவர் சீருடையில் இருந்ததால் காரில் இருந்த 3 இளம்பெண்களும் அவரை காரில் ஏற்றியுள்ளனர்.

சுகுணன் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார்.

கார் சிறிது தூரம் சென்றதும் பின் இருக்கையில் இருந்த இளம் பெண்களிடம் சுகுணன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள், கல்லம்பலம் அருகே காரை நிறுத்தி அவரை இறக்கி விட்டனர்.

பின்னர் இதுகுறித்து கல்லம்பலம் போலீசில்  புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்ஐ சுகுணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை