வால்பாறை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புலி உலா

தமிழ் முரசு  தமிழ் முரசு
வால்பாறை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புலி உலா

வால்பாறை: வால்பாறையை அடுத்து வில்லோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் கடந்த 13ம் தேதி தேயிலை தொழிற்சாலை பகுதியில் காட்டெருமை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை பலியாகி உள்ளது என்று தெரிந்தது.

இதையடுத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 கேமராக்கள் பொருத்தினர். இந்த நிலையில், 14, 15ம் ஆகிய தேதி இரவு 2 நாட்கள் புலி வந்து காட்டெருமை உடலை சாப்பிட்டது கேமராவில் பதிவாகி உள்ளது.

புலி நடமாட்டம் உள்ளதால் வில்லோனி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வில்லோனி எஸ்டேட்டில் வெளியான புலியின் படமும், தலநார் எஸ்டேட் பகுதியில் நடமாடிய புலியின் படமும் ஒரேமாதிரி உள்ளதாக கூறப்படுகிறது.

வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

.

மூலக்கதை