மின்சாரம் பாய்ச்சி மனைவி, மாமியாரை கொல்ல முயற்சி: சாப்ட்வேர் இன்ஜினியர் ஓட்டம்
நாமக்கல்: மின்சாரம் பாய்ச்சி மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற இன்ஜினியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் அன்புநகரை சேர்ந்தவர் தங்கவேல்.
இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகள் ரூபிகா (30).
இவருக்கும், கரூர் மாவட்டம் மூலமங்கலத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் சிவப்பிரகாசம் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, ரூபிகா நாமக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மனைவியை தேடி நாமக்கல் வந்த சிவப்பிரகாசம், மீண்டும் தகராறு செய்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட மாமனார் தங்கவேலுவை தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.
இதையடுத்து, ஜாமீனில் வந்த அவர் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அழைத்துள்ளார். ஆனால், ரூபிகா மறுத்து விட்டார்.
நேற்று முன்தினம் நாமக்கல் வந்த சிவப்பிரகாசம், ரூபிகா, வளர்மதி ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, இருவரையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.