துணியில் சுற்றி ஆண் சிசு எரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
துணியில் சுற்றி ஆண் சிசு எரிப்பு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த குருவம்மாபேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பாதி எரிந்தவாறு ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பிரம்மதேசம் போலீசார் சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தையை எரிக்க முயன்றவர்கள் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

மூலக்கதை