மக்களவை தேர்தலில் மக்கள் நல்ல தீர்வு வழங்கியுள்ளனர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

தினகரன்  தினகரன்
மக்களவை தேர்தலில் மக்கள் நல்ல தீர்வு வழங்கியுள்ளனர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: மக்களவையில் முதன்முறையாக அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளது பெருமையானது என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதிவியேற்றார். தொடர்ந்து 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதில் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை தொடர்ந்து பாஜ சார்பில் புதிய சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலம் கோடாப்பண்டி தொகுதி எம்பி ஓம் பிர்லா (56) அறிவிக்கப்பட்டார். ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இது தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூஜனதா கட்சியும் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன.இந்த நிலையில் நேற்று சபாநாயகர் தேர்வு மக்களவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் வேட்பாளராக யாரையும் நிறுத்தவில்லை. ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 13 தீர்மானங்கள் அவையில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஓம் பிர்லா  குரல் ஓட்டு மூலம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் மோடி அழைத்து சென்று அமரவைத்தார்.  தொடர்ந்து பாஜ, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  உரை: * வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்தார்.* மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். *  மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது என்றார். * நாட்டில் முதல் முறையாக அதிகளவு பெண் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். * பாதிக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாக உள்ளனர். * பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் மக்களவையில் இடம் பெற்றுள்ளனர்.* தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல அனைத்து எம்பிக்களும் பணியாற்ற வேண்டும்.* நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல புதிய தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.* பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதே நமது நோக்கம் என்றார். * இந்தியாவில் கிராமங்களும் நகரங்களும் முன்னேறி வருகின்றன. * 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்.* நம் வருங்கால தலைமுறைக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்றார்.* விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும் என்றும் தெரிவித்தார்.* பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.* ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது,* பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முத்தலாக் ஒழிப்பு அவசியம்* குடியரசு தலைவர் கிராம புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள்.* பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் உள்ளது.* பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.* முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.* சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் உதவுகிறது.* கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.* உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.* தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.* வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது.ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். ஜனாதிபதி உரை முடிந்ததையடுத்து அவையின் நிகழ்வுகள் நடைபெறும்.நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை