தோனியை முந்தினார் ரோகித்

தினமலர்  தினமலர்
தோனியை முந்தினார் ரோகித்

மான்செஸ்டர்: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித்.


மான்செஸ்டரில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.


பாகிஸ்தானின் ஹசன் அலி வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச 'டுவென்டி-20') அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (355 சிக்சர்) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 330 போட்டியில், 357 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.

மூலக்கதை