பாக்., வீரர் ஆமிருக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பாக்., வீரர் ஆமிருக்கு எச்சரிக்கை

மான்செஸ்டர்: உலக கோப்பை லீக் போட்டியில் ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட மையப் பகுதியில் ஓடிய பாகிஸ்தானின் முகமது ஆமிரை அம்பயர் எச்சரித்தார்.
இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டரில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன் மூன்றாவது ஓவரின் மூன்றாவது ஓவரை வீசிய ஆமிர், ஆடுகளத்தின் மையப்பகுதியில் கால்பதித்தார். இப்படி செய்வது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிக்கு எதிரானது. இப்பகுதியில் சேதம் ஏற்பட்டால், ஆடுகளத்தின் தன்மை பாதிக்கும்.
இதை கண்ட அம்பயர் ஆக்சன்போர்டு (ஆஸி.,) ஆமிரை எச்சரித்தார். மீண்டும் இதே தவறை, 5வது ஓவரின் 5வது பந்தை வீசியபோதும் ஆமிர் செய்தார். அம்பயர் இரண்டாவது முறையாக எச்சரித்தார். ஆமிர் இன்னொரு முறை இத்தவறை செய்தால், இப்போட்டியில் பவுலிங் செய்ய தடை விதிக்கப்படுவார்.

மூலக்கதை