குமரியில் கிரிக்கெட் விளையாடும் போது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் போது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் சச்சின்(14) என்பவன் உயிரிழந்தான். அலையில் சிக்கி மாயமான சகாயரெஜின்(12) மற்றும் ரெஜித் (12) ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். அலையில் சிக்கிய மற்றொரு சிறுவன் ஆரோக்கிய ரெக்சின் (11) மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளான்.