மகனுக்கோ; மகளுக்கோ அறிவுரை தேவையில்லை: விஜய் சேதுபதி

தினமலர்  தினமலர்
மகனுக்கோ; மகளுக்கோ அறிவுரை தேவையில்லை: விஜய் சேதுபதி

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் அருண் குமாருடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். சிந்துபாத் என்ற புதிய படம், இருவரும் இணைந்து எடுக்கப்படுகிறது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் அஞ்சலி மற்றும் அவர் மகன் சூர்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இது குறித்து, நடிகர் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சிந்துபாத் படத்தில், என்னுடைய் மகன் சூர்யாவை கட்டாயம் நடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தது, இயக்குநரும் என்னுடைய நண்பருமான அருண்குமார்தான். இந்த படத்தில், நீங்கள் நடிக்கிறீர்களோ இல்லையோ சூர்யாவை கட்டாயம் நடிக்க வைக்கப் போகிறேன் என சொல்லி, நடிக்க வைத்துக் கொண்டிருப்பது இயக்குநர் அருண் குமார்தான். இப்படித்தான், சூர்யா நடிக்கப் போகும் விஷயத்தையே எனக்கு அவர் தெரிவித்தார். சூர்யாவுக்கு நடிப்பு மட்டுமல்ல; படிப்பு, வாழ்க்கை எல்லாவற்றையும் நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அதனால், சூர்யா நடிக்க வருகிறான் என்றதும், அதில் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் நானும் ஒப்புக் கொண்டேன்.

அவனுக்கு நிறைய திறமைகள் உண்டு. அதனால், அவன் எங்கு சென்றாலும் வெற்றி பெறுவான். எந்த விஷயத்துக்காகவும் நான் சூர்யாவுக்கு அறிவுரை வழங்க மாட்டேன்.

என்னுடைய மகனைப் போலவே மகளும் சங்கத் தமிழன் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கிறார். அவருக்கும் மகனைப் போன்ற கோட்பாடுகள்தான் உண்டு. இவ்வாறு விஜய்சேதுபதி கூறியிருக்கிறார்.

மூலக்கதை