முதன்முதலாக போலீஸ் வேடத்தில் ஷ்ரத்தா கபூர்

தினமலர்  தினமலர்
முதன்முதலாக போலீஸ் வேடத்தில் ஷ்ரத்தா கபூர்

பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், பிரபாஸ் நடிக் கும் சாஹோ படம் மூலம் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ளார். அதோடு அவருக்கு இந்த படம் ஒரு ஸ்பெசலாகவும் அமைந்துள்ளது. அதாவது இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஷ்ரத்தாகபூர்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், நான் நீண்டநாட்களாக நடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட போலீஸ் அதிகாரி வேடம் சாஹோவில் கிடைத்திருக்கிறது. அதனால் அதிக உற்சாகத்துடன் இந்த படத்தில் நடித்தேன். அதோடு படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு விசாரணை செய்தபடி ரிகர்சல் பார்த்து இந்த படத்தில் நடித்துள்ளேன். அதனால் சாஹோவில் எனது பெஸ்ட் பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.

மூலக்கதை