சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர் சசி - விஜய் ஆண்டனி

தினமலர்  தினமலர்
சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர் சசி  விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனியைப்பொறுத்தவரை தான் வளருவதற்கு காரணமாக இருந்தவர்களை மேடைகளில் சொல்லி அவர்களை பெருமைப்படுத்துவதை வழக்கமாகக்கொண்டுள்ளார். அந்த வகையில், இயக்குனர் சசியைப்பற்றி அவர் பல மேடைகளில் பேசி வருகிறார்.

அவர் கூறுகையில், நான் இசையமைப்பாளராக சின் னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகு இயக்குனர் சசியிடம் சான்ஸ் கேட்டு சென்றேன். அப்போது அவர் டிஷ்யூம் படத்தில் என்னை இசையமைக்க வைத்தார். அந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால் அதன்பிறகு நான் விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளை பெற்றேன்.

அதேபோல் நடிகரான பிறகும் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் நடித்து வந்தபோது அவர் இயக்கத்தில் நடித்த பிச்சைக்காரன் படம்தான் எனக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. தமிழ் மட்டு மின்றி தெலுங்கிலும் அந்த படம் வசூல் சாதனை புரிந்தது. அந்த வெற்றி கொடுத்த வெளிச்சத்தில்தான் இப்போதுவரை நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்ன விஜய் ஆண்டனி, தொடர்ந்து சசி இயக்கும் படங்களில் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை