நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் 166வது வார்டுக்குக்கு உள்பட்ட நங்கநல்லூர் எம். ஜி. ஆர். சாலை ஸ்டேட் பாங்க் காலனி சாலை இணைப்பு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

இந்த சாலை வழியாக திரிசூலம் கல்குவாரியில் இருந்து வேகமாக வரும் லாரிகள் மற்றும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்த பகுதியில் 5க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

சைக்கிளில் செல்லும் மாணவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் தாறுமாறாக  செல்லும் வாகனங்களால் இவ்வாறு விபத்துக்கள் நடக்கிறது.

எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று ஆலந்தூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகளும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

எனவே, எம்ஜிஆர் சாலையில் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை