வாணுவம்பேட்டையில் சாலை பள்ளத்தில் சிக்கிய மினி லாரி கவிழ்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாணுவம்பேட்டையில் சாலை பள்ளத்தில் சிக்கிய மினி லாரி கவிழ்ந்தது

ஆலந்தூர்: வாணுவம்பேட்டையில் தண்ணீர் கேன் ஏற்றிவந்த மினிலாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார். சென்னை உள்ளகரம்-புழுதிவாக்கத்தில் இருந்து ஒரு மினி லாரி சென்றது.

இதை டார்வின் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கேன் ஏற்றிக்கொண்டு வந்தார்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் வாணுவம்பேட்டை அருகே உள்ளகரம் செல்வதற்காக லாரியை திருப்பியபோது வேனின் பின்சக்கரம் சாலை பள்ளத்தில் இறங்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி கவிழ்ந்தது.

டிரைவர் டார்வின் காயம் அடைந்தார். மினி லாரியில் இருந்து தண்ணீர்கேன்கள் சாலையில் சிதறி ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை