மம்தா மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டிரைக்:

தினமலர்  தினமலர்
மம்தா மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டிரைக்:

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள, அரசு மருத்துவமனையில் முதியவருக்கு . டாக்டர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறியதால் தான், இறந்தார் என கூறி முதியவரின் உறவினர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரு டாக்டர்கள், பலத்த காயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை கண்டித்து, அரசு மருத்துவமனையின் டாக்டர்கள், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு, பணிகளை புறக்கணித்துள்ளனர். இதனால், மருத்துவ சேவை கிடைக்காமல், ஏராளமானோர் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


கோல்கட்டா டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வேகமாக பரவியுள்ளது.போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் எந்த பதிலும் இல்லை. இது குறித்து கவர்னர் கேசரி நாத் திரிபாதி கூறுகையில், முதல்வரிடமிருந்து பதில் வந்தால் மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்தை தூண்டிவிட்டதே பா.ஜ. மற்றும் கம்யூ. கட்சியினர் என மம்தா பேசியது டாகர்டகளை மேலும் ஆத்திரமடைய செய்தது, இதற்கு நிபந்தனையற்ற மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும், டாக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் போட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் மம்தா நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடத் தயார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை